வெள்ளானைப்பட்டி ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி அதிமுக எம்எல்ஏ மனு

கோவை மாவட்டத்தில், வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் குறித்து, கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ அருண் குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மீது முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி அருண்குமார் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பதவி ஏற்ற நாள் முதல் முறைகேட்டில் ஈடுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வழக்கை திசை திருப்பும் வகையில் பொய் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று வலியுறுத்தி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் இன்று (செப்டம்பர் 25) மனு அளித்தார்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சுகுமார், சேர்மன் கவிதா சண்முகம், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...