கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: கோபனரி சோதனைச் சாவடியில் தீவிர பரிசோதனை

கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, கோபனரி எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


கோவை: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு-கேரள எல்லையான கோபனரி பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.



கோபனாரி காவல் சோதனைச் சாவடியில் காரமடை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் பிரவின், செவிலியர் விஜயலட்சுமி, மருந்தாளுனர் ஆண்டனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு மற்றும் சிவராஜ் ஆகியோர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் வாகனங்களில் பயணிப்பவர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர்.

உடல் நிலையை கண்காணித்து, பின்னரே கேரளாவில் இருந்து வருபவர்களை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையின் கூற்றுப்படி, இந்த கண்காணிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெறும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்க இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...