கோவை கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

கோவையின் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் வால்பாறையில் சுற்றுலா சென்றபோது, ஸ்டேன்மோர் எஸ்டேட் அருகே ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளானர். ஒரு மாணவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்ற கோவை ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் 3 இருசக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் சோலையார் அணையை நோக்கி செல்லும் வழியில், ஸ்டேன்மோர் எஸ்டேட் வளைவில் திரும்பும்போது, டாடா காப்பி எஸ்டேட்டுக்கு சொந்தமான ஆம்புலன்சுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.



இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்ரீகாந்த் (20) மற்றும் ரோஷன் (20) ஆகிய இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் நண்பர்கள் ஆட்டோவில் ஏற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், வழியிலேயே ஸ்ரீகாந்த் உயிரிழந்துவிட்டார். ரோஷன் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஸ்ரீகாந்தின் உடல் வால்பாறை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வால்பாறை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...