கோவை பீளமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெயிண்டர் பலி

கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பேர் மீது மோதியது. விபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை பீளமேடு கோல்ட்வின்ஸ் பகுதியில் நேற்று (செப்டம்பர் 22) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்து நடந்த உடனேயே அப்பகுதி வழியாக சென்றவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டர் ரமேஷ் (50) என்பதும், படுகாயமடைந்தவர் திண்டுக்கல் அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜா (42) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து, பீளமேடு பகுதியில் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிய வந்தது.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் திருப்பூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் (53) என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...