தாராபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாராபுரம் ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் ஓலக்கடை எதிரே உள்ள தனியார் கேஸ் பங்க் அருகே சிறுத்தை ஒன்று இருப்பதை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 40) பார்த்தார். உடனடியாக அவர் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.



இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் தலைமை காவலர்கள் கருப்புசாமி மற்றும் சேகர் ஆய்வு செய்தனர். பின்னர் காங்கேயம் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் வனச்சரக அலுவலர் மௌனிகா தலைமையில் வனக்காவலர் குணசேகரன், வனக்காப்பாளர் பூரணி ஆகியோர் தனியார் கேஸ் பங்கின் அருகில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை வந்ததற்கான தடயங்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்தனர். மேலும், சிவக்குமாரிடம் சிறுத்தையின் அடையாளங்களை கேட்டறிந்தனர். இப்பகுதியின் அருகே ரங்கம்பாளையம், கருவேலம்பள்ளம், ஆச்சியூர், மங்களம்பாளையம் பிரிவு, கோனேரிப்பட்டி, துலுக்கனூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.

வனக்காவலர்கள் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...