கோவை அரசு மருத்துவர்கள் ஈரோடு தொழிலாளியின் தொடையில் இருந்து துப்பாக்கி குண்டை வெற்றிகரமாக அகற்றினர்

ஈரோடு தொழிலாளி செந்தில்குமாரின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்களை பாராட்டினர்.


கோவை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் குமார் (45) என்பவரின் வலது தொடையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் போது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட செந்தில்குமார், கட்டுக்கடங்காத ரத்தப்போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், ஏர்கன் குண்டு ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பின்னர், இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில், சேதமடைந்த ரத்த நாளம் சரி செய்யப்பட்டு, தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் மூலம் நோயாளியின் உயிரும் காலும் காப்பாற்றப்பட்டது.

இந்த சிறப்பான சிகிச்சைக்காக, முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.நிர்மலா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கண்ணதாசன் ஆகியோர் இரத்த நாள நிபுணர்கள் டாக்டர் ப.வடிவேலு, டாக்டர் பா.தீபன்குமார் உள்ளிட்டோரை செப்டம்பர் 20 அன்று பாராட்டினர். தற்போது செந்தில்குமார் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...