தாராபுரம் அருகே அண்ணாவின் 116வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம்

தாராபுரம் அருகே நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என உறுதியளிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள நல்லம்பாளையத்தில் அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அதிமுக தலைமை கழக பேச்சாளர் இராசகோபால் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்திற்கு தலைமை வகித்த திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் எம்எல்ஏவுமான மகேந்திரன் உரையாற்றினார்.



தனது உரையில் மகேந்திரன், "2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார்" என்று உறுதியாகக் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், பாலகுமாரன், செந்தில்குமார், சோமசுந்தரம், ராஜரத்தினம், நகர செயலாளர் ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் பைப்ரவி, தமிழரசன், லட்சுமணசாமி, வெற்றிவேல், சுகன்குமார், கொளத்துப்பாளையம் அவைத்தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் சின்னத்துரை, சிவசங்கரன், ராமதுரை மற்றும் பல சார்பு நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் இளைஞர் அணி தேர்பட்டி ஆதித்தன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...