உடுமலை ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை, செயற்கை நீரூற்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவுண்டானாவில் ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்றை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.



உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இந்த ரவுண்டானா போதிய பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்து வந்தது. இதனால் பொதுமக்கள் ரவுண்டானாவை பராமரித்து அழகுபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தன்னார்வலர்களின் உதவியுடன் ரவுண்டானா புதுப்பிக்கப்பட்டுள்ளது.



"பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப, தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஏறு தழுவுதலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்கள் மற்றும் வீரர்களுடன் கூடிய ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.





மேலும், வண்ண வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுப் பூங்கா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் சமூக பங்களிப்பு நிதியில் அமைக்கப்பட்ட தலைவர்கள் பூங்கா மற்றும் புதுப்பிக்கப்பட்ட அசோகர் ஸ்தூபி சந்திப்பு ஆகியவற்றையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

உடுமலையின் அடையாளமாக அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை சிலை மற்றும் செயற்கை நீரூற்று முன்பு பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், நகர மன்ற தலைவர் மத்தின், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...