மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது

மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக் கைது செய்யப்பட்டார். பல பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் - கோவை மெமோ ரயிலில் பயணித்த கல்லூரி மாணவியை செல்போனில் புகைப்படம் எடுத்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரஜாக், தினமும் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு மெமோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார். இவர் ரயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணம் செய்த அப்துல் ரஜாக், ஒரு கல்லூரி மாணவியை செல்போனில் படம் எடுத்ததாகவும், அவரை அருவருக்கத்தக்க வகையில் பார்த்ததாகவும், மேலும் அவர் மீது உரசி கொண்டே வந்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில் வந்தவுடன் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும், அந்த ரயிலில் பயணித்த பல பெண்களும் இதே மாதிரி தங்களிடமும் அவர் நடந்து கொண்டதாக கூறி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் அப்துல் ரஜாக் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...