பொள்ளாச்சியில் வீட்டில் வளர்த்த பூனை கொண்டு வந்த பாம்பால் பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சி நேரு நகரில், வீட்டில் வளர்த்த பூனை தெருவில் இருந்த பாம்பை உள்ளே கொண்டு வந்ததால், தூங்கிக் கொண்டிருந்த 58 வயது பெண் பாம்பு கடியால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்த சாந்தி (58) என்ற பெண், தனது மகன் சந்தோஷுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கணவர் ரவி உயிரிழந்தார். சாந்தி தனது வீட்டில் ஒரு பூனை குட்டியை ஆசையாக வளர்த்து வந்தார்.

சம்பவம் நடந்த நாளன்று, வீட்டு வளாகத்தில் ஒரு கொடிய விஷப் பாம்பு சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட பூனை, அந்தப் பாம்பைப் பிடித்து வீட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்தது.

சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார்.

வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையானது என்ற இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...