உலக இருதய தினத்தையொட்டி கோவையில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான்

கோவையில் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினத்தையொட்டி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மராத்தான் நடைபெறுகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை (GKNM) சார்பில் உலக இருதய தினத்தையொட்டி "ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்" என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் நடைபெறவுள்ளது. இந்த மராத்தான் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி காலை 5:30 மணியளவில் பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கும்.

இந்த நிகழ்வு இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மராத்தான் நிகழ்வுக்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீட்டு விழா ஏற்கனவே கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

GKNM மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறுகையில், "கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் பதிப்பில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். அதில் கிடைத்த நிதியுதவியில் இதயம் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 29 குழந்தைகள் பயனடைந்தனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மராத்தானில் புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளில் இருந்து குணமடைந்த குழந்தைகளும் பங்கேற்கவுள்ளனர்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்த நிகழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்" என்றும் கூறினார். இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ticketprix.com என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம் அல்லது 97900 72303 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...