2026-ல் ஆட்சியில் பங்கு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்

கோவை அவினாசி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026-ல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற வாசகம் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த போஸ்டர்களில் "2026-ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை ரமேஷ் என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது கோவையில் தான். அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டிய பின்பு மதுரைக்கு மாற்றலாகி சென்று டி.பி.ஐ என்ற இயக்கத்தை வழி நடத்தினார். பின்னர் தலித் தலைவர் மலைச்சாமி அவர்களுடன் கைகோர்த்து அவருக்குப் பின் அதனை வழி நடத்தி, பின்பு அரசியல் கட்சியாக மாற்றி தேர்தல் அரசியலை புறக்கணித்து விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், "எனது அருமை நண்பர்கள் கோவையில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற புதிய அத்தியாயத்தை முதன் முதலில் கோவையில் தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு கொங்கு சம்பத் மற்றும் அனைத்து விடுதலை சிறுத்தை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்" எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையில் இருந்து கோவை சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணின் மைந்தன், ஒயிட்ஹவுஸ் ந.செல்லத்துரை மத்திய சென்னை நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "எழுச்சித் தமிழர் முதன் முதலில் கோவையில் காலடி வைத்த மண்ணில் இது போன்ற புரட்சி முதலில் தோன்றி இருக்கின்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...