கோவையில் மத நல்லிணக்க மிலாடி நபி விழா: அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாட்டம்

கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் ஏற்பாடு செய்த மத நல்லிணக்க மிலாடி நபி விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர். உலக அமைதிக்காக பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.



Coimbatore: கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக, அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து மத நல்லிணக்க மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு மதத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும், உலக மக்களின் அமைதி மற்றும் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.



விழாவில் இஸ்லாமிய குருமார்கள், பேரூர் மடாதிபதி தம்புரான் உள்ளிட்ட இந்து சமூக பிரதிநிதிகள், குருத்துவார் தரப்பில் டோனி சிங் உள்ளிட்ட பல்வேறு மத பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய மத பிரதிநிதிகள், "நாட்டில் வெவ்வேறு மதங்களாக மக்கள் இருந்தாலும் அனைவரும் ஒன்று" என்று வலியுறுத்தினர்.

பல் சமய நல்லோர் இயக்கத்தின் தலைவர் முகமது ரபி பேசுகையில், "தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முதன் முறையாக மிலாடி நபிக்கு விடுமுறை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மிலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு பல்வேறு உதவிகளை கலைஞர் மற்றும் திராவிட மாடல் ஆட்சியினர் செய்து வருகின்றனர்" என்று நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், எதிர்காலத்திலும் அனைத்து மத விழாக்களையும், பண்டிகைகளையும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடுவதாக உறுதியளித்தனர். மேலும், நாட்டில் பிளவு வாத சக்திகளுக்கு இடமில்லை என்றும், மதங்கள் வேறாயினும் அனைவரும் ஒரே மனதுடன் நல்லிணக்கம் பேணி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...