மிலாது நபி விழா: 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் தீவிரம்

கோவையில் மிலாது நபி விழாவையொட்டி 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்க தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. 400க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.



கோவை: கோவை மாநகரில் மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு 40,000 பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இறைத்தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.



இதனையொட்டி, பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்கான பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.





இந்த மாபெரும் உணவு தயாரிப்பிற்காக 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோவுக்கும் அதிகமான பிரியாணி அரிசி பயன்படுத்தப்படுகிறது.



மேலும், டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்கள் தேவைப்படுகிறது.



250 பெரிய அளவிலான பாத்திரங்களில் 300-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் உக்கடம், ஜி.எம் நகர், கோட்டைமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்க உள்ளனர். இதற்கு முன்னதாக, மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...