பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 14 அன்று நடைபெறுகிறது. 2023 ஜனவரி முதல் 2024 செப்டம்பர் வரை பயின்று முடித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா வரும் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

2023 ஜனவரி 23 முதல் 2024 செப்டம்பர் வரை பல்கலைக்கழகம், உறுப்பு கல்லூரிகள் மற்றும் தொலைநிலைக் கல்வி வாயிலாக பயின்று முடித்து, தற்காலிக சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும், பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

2023 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 25 ஆம் தேதி வரை Ph.D. முடித்தவர்களும் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். Ph.D. மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.b-u.ac.in அல்லது https://b-u.ac.in/298/convocation என்ற இணையதளங்கள் வாயிலாக தகவல்களைப் பெறலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...