பள்ளேபாளையம் அருகே குட்டையில் இரண்டு முதலைகள்: பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் பள்ளேபாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இரண்டு முதலைகள் தென்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கு முன்பு ஒரு முதலை தென்பட்ட நிலையில், தற்போது அதே குட்டையில் இரண்டு முதலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



இது குறித்த தகவல் சிறுமுகை வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த இரண்டு தினங்களாக வனத்துறையினர் முதலைகள் உள்ள குட்டையை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முதலைகள் அந்த பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைத்து, அவற்றை கண்காணித்தும் வருகின்றனர்.

விரைவில் அந்த குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றி, முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...