திருச்சியில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி சிலைகளை திறந்து வைத்தார் திமுக செயலாளர் நா.கார்த்திக்

திருச்சி ஜெயங்கொண்டானில் கோவை மெட்டல் எம்.மணி - சரஸ்வதி மணி திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. திமுக செயலாளர் நா.கார்த்திக் சிலைகளை திறந்து வைத்தார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையும் திறக்கப்பட்டது.


Coimbatore: திருச்சி ஜெயங்கொண்டானில் (சேங்கனம்) இன்று (செப்டம்பர் 16) காலை, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் கோவை மெட்டல் எம்.ராஜா அவர்களின் பெற்றோர் கோவை மெட்டல் எம்.மணி மற்றும் சரஸ்வதி மணி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.) கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தார். முன்னதாக அவர் திமுக கொடியையும் ஏற்றி வைத்தார்.



அதேவேளையில், கோவை ஜென்னி ரெசிடன்சி, பிளாக் தண்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.வின்சென்ட் அடைக்கலராஜ், ஜெயங்கொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் எம்.ராஜா, வசந்தி ராஜா, ஆர்.தீபக்குமார், கே.எல்.வெங்கடேஷ், நிவேதா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...