கோவை சங்கனூரில் கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்களுக்குப் பிறகு மீட்பு

கோவை சங்கனூர் அருகே கிணற்றில் குதித்த இளைஞரின் உடல் 4 நாட்கள் கழித்து மீட்கப்பட்டது. தூத்துக்குடி கூபா டைவிங் குழுவினரின் உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.


Coimbatore: கோவை சங்கனூர் நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் என்ற இளைஞர், திருமணம் ஆகாத விரக்தியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலுடன் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 11 அன்று மாலை, விஜயராகவன் தனது வீட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த நான்கு நாட்களாக தீயணைப்புத் துறையினர் தீவிரமாக உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. இதனால், தூத்துக்குடியில் உள்ள கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் முத்து எடுக்கும் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 15 அன்று கோவை வந்தடைந்த கூபா டைவிங் குழுவினர், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உடலை மீட்டு கிணற்றிற்கு மேலே கொண்டு வந்தனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் நான்கு நாட்களாக அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளைஞர்களிடையே மது அருந்தும் பழக்கம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...