ஓணம் பண்டிகை: பாரம்பரிய உடையில் வரும் ஜோடிகளுக்கு தங்க நாணயம் பரிசு - கோவை ரயில் நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு

கோவை ரயில் நிலையத்தில் போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் நடத்தும் ஓணம் சத்யா நிகழ்ச்சியில், பாரம்பரிய உடையில் வரும் ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படுகிறது. 200 பேர் பங்கேற்கும் இந்த நிகழ்வில் சிறப்பு ஓணம் உணவும் பரிமாறப்படுகிறது.



Coimbatore: கோவை ரயில் நிலையத்தில் பாபி குரூப் நிறுவனத்தின் சார்பில் இயங்கும் போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி உணவகம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் இந்த உணவகம், ஓணம் திருநாளை முன்னிட்டு 'ஓணம் சத்யா' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே 200 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு சிறப்பு ஓணம் உணவுகள் வழங்கப்படுகின்றன.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 200 பேரில், ஓணம் பண்டிகையை சிறப்பாக விளக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து வரும் ஜோடிகள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவர். இதில் மூன்று ஜோடிகளுக்கு 4 கிராம் தங்க நாணயம் அல்லது தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என போச்சே ஃபுட் எக்ஸ்பிரஸ் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், சில வாரங்களுக்கு முன்பு இந்த நிறுவனம் பிரியாணி போட்டியை நடத்தி, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பரிசுத் தொகையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...