கோவை அவினாசி சாலையில் அண்ணாவின் 116வது பிறந்தநாள்: அதிமுக சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.


Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கழக தலைமை நிலைய செயலாளரும், கழக கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். அவருடன் தேமுதிக பிரதிநிதி விஜய்பிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே. அர்ஜுனன், கோவை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர். ஜெயராம் ஆகியோரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.



இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான செம்மலை வேலுச்சாமி, பீளமேடு துரைசாமி ஆகியோருடன், பார்த்திபன், சிங்கை பாலன், பொன்னுச்சாமி போன்ற முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், சார்பு அணி செயலாளர்களான ஆர். பிரபாகரன், லாலிரோடு ராதா, புரட்சித்தம்பி, ஏ. மணிகண்டன், கே.கே. சக்திவேல், ஹமீது, எஸ்.ஆர். ரவி ஆகியோரும் பங்கேற்றனர்.

பகுதி கழக செயலாளர்களான சாரமேடு சந்திரசேகர், சிவக்குமார், சுபம் மணிகண்டன், உலகநாதன், மௌனசாமி, வெள்ளிங்கிரி, கனகராஜ், நடராஜ், எம்.ஜி.ஜே. ராஜ்குமார், காட்டூர் செல்வராஜ், இலக்கடை ஜெயபால் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதோடு, வார்டு கழக செயலாளர்கள், மாவட்ட, பகுதி, வட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் இந்த மரியாதை நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...