உடுமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

உடுமலையில் ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



இந்த விலை உயர்வின் விவரங்களை பார்க்கும்போது, மல்லிகை ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், முல்லை ரூ.200-லிருந்து ரூ.1,000 ஆகவும், சாதிப்பூ ரூ.300-லிருந்து ரூ.600 ஆகவும், சம்பங்கி ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கோழிக்கொண்டை ரூ.60-லிருந்து ரூ.100 ஆகவும், செவ்வந்தி ரூ.150-லிருந்து ரூ.200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ.200-லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.



ரோஸ் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ.160-லிருந்து ரூ.300 ஆகவும், பன்னீர் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.40-லிருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து தமிழர்களின் விசேஷ நிகழ்வுகளான காதணி, சீமந்தம், பூப்பு நன்னீராட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளும் நாளை அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் ஒன்றிணைந்து வந்ததால் பூக்களுக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



விலை அதிகரித்தாலும் கூட, மணக்கும் மல்லிகையை மனம் நோகாமல் வியாபாரிகள் சொன்ன விலைக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...