உடுமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

உடுமலையில் ஓணம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் காரணமாக பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆக அதிகரித்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



இந்த விலை உயர்வின் விவரங்களை பார்க்கும்போது, மல்லிகை ரூ.500-லிருந்து ரூ.2,000 ஆகவும், முல்லை ரூ.200-லிருந்து ரூ.1,000 ஆகவும், சாதிப்பூ ரூ.300-லிருந்து ரூ.600 ஆகவும், சம்பங்கி ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும், கோழிக்கொண்டை ரூ.60-லிருந்து ரூ.100 ஆகவும், செவ்வந்தி ரூ.150-லிருந்து ரூ.200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ.200-லிருந்து ரூ.400 ஆகவும் அதிகரித்துள்ளது.



ரோஸ் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ.160-லிருந்து ரூ.300 ஆகவும், பன்னீர் ரோஸ் ரூ.150-லிருந்து ரூ.300 ஆகவும், செண்டு மல்லி ரூ.40-லிருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து தமிழர்களின் விசேஷ நிகழ்வுகளான காதணி, சீமந்தம், பூப்பு நன்னீராட்டு விழா, திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளும் நாளை அதிகளவில் நடைபெறுகின்றன. இந்த பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் ஒன்றிணைந்து வந்ததால் பூக்களுக்கான தேவை அதிகரித்து, அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.



விலை அதிகரித்தாலும் கூட, மணக்கும் மல்லிகையை மனம் நோகாமல் வியாபாரிகள் சொன்ன விலைக்கு பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...