தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் ஐந்தாண்டு கூட்டம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் ஐந்தாண்டு கூட்டம் நடைபெற்றது. பயிர் சிலந்திகள் ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் விவசாயிகளுக்கான தகவல் பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு மைய பூச்சியியல் துறையில், அகில இந்திய பயிர்ச் சிலந்திகள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் கூடும் ஐந்தாண்டிற்கு ஒரு முறையான கூட்டம் (2012-2023) 11.09.2024 அன்று நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பயிர் பாதுகாப்பு மைய இயக்குனர் முனைவர் மா.சாந்தி தொடக்க உரையாற்றினார். அவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிர் சிலந்திகள் ஆராய்ச்சியின் துவக்கம், நோக்கங்கள் மற்றும் வளர்ந்து வரும் புதிய வகை பயிர் சிலந்திகள் அதன் தாக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.



கூட்டத்தின் தலைவரான தோட்டக்கலை துறை முன்னாள் இணை இயக்குநர் முனைவர் நா.க.கிருஷ்ணகுமார், பயிர்களை தாக்கும் சிலந்தி வகைகள், ஒருங்கிணைந்த பயிர் சிலந்திகள் மேலாண்மை, பயிர் சிலந்தி எதிர்ப்பு திறன் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை, அயல் நாட்டு பயிர் சிலந்தி வகைகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார். மேலும், பயிர் சிலந்திகள் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு எளிதில் சென்றடையும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், பயிர் சிலந்திகளால் ஏற்படும் மகசூல் இழப்பை வருமான இழப்பாக கருத வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஐந்தாண்டு கூட்டத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில் NCIPM இயக்குநர் முனைவர் சுபாஷ் சந்தர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி இயக்குனர் முனைவர் கு.ராமராஜு, UAS பெங்களூரு முன்னாள் PGS தலைவர் முனைவர் ந.ஸ்ரீனிவாசா, CSKHPKV பலம்பூர் முன்னாள் பேராசிரியர் மற்றும் பூச்சியியல் துறை தலைவர் முனைவர் ரவீந்தர் சிங்க் சந்தல், மண் கணுக்காலி பூச்சிகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அர்ஜுன் சிங்க் பாலோடா மற்றும் UAS பெங்களூரு பயிர் சிலந்திகள் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.சின்னமாதே கௌடா ஆகியோர் அடங்குவர்.

பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ம.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.



இந்த நிகழ்வில் பூச்சியியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், மண் கணுக்காலி பூச்சிகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர் ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் முனைவர் எ. சுமதி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...