கோவை அன்னபூர்ணா சீனிவாசன் ஜி.எஸ்.டி. மன்னிப்பு விவகாரம்: தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது - கனிமொழி எம்.பி கண்டனம்

ஜி.எஸ்.டி. தொடர்பான கூட்டத்தில், நடைமுறை சிக்கல்கள் குறித்து பேசிய அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சரை சந்தித்து அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கோரிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், திருக்குறளை மேற்கோள் காட்டி, தமிழர்களின் சுயமரியாதையை சீண்டக்கூடாது என திமுக எம்.பி. கனிமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை கொடிசியாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டி. தொடர்பான சிக்கல்களை எடுத்துரைத்தார்.

இனிப்புக்கு 5% ஜி.எஸ்.டி. மற்றும் காரத்துக்கு 12% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும், Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்லாமலும் அதற்குள் வைக்கப்படும் க்ரீமுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் சீனிவாசன் சுட்டிக்காட்டினார். இந்த முரண்பாடுகள் காரணமாக உணவகம் நடத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தொழில்துறையினர் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், திருக்குறளை மேற்கோள் கட்டிதிமுக மகளிர் அணி தலைவர் மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி அவரது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில், ‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து’

- குறள் 978, அதிகாரம் 98. 

ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்றுஎச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...