மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் - மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ் புலிகள் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து உரையாற்றினார். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் திருப்பதி மற்றும் காளிமுத்து ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார். பின்னர், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்துள்ள மறுசீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

உடுமலை கோட்டாட்சியர் கண்டிசன் நிலங்களுக்கு NOC வழங்குவதை தமிழ் புலிகள் கட்சி வன்மையாக கண்டித்தது. மேலும், உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் போலி பத்திரங்களை தயாரித்து வழங்குவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 28, 2024 அன்று கோவையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், Dharapuram ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...