பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து சர்ச்சை: மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

காரமடை அருகே பெள்ளாதி குளத்தில் மீன்பிடி ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்து சர்ச்சை எழுந்தது. அதிகாரிகள் தலையீட்டால் இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி குளத்தில் மீன்பிடிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெள்ளாதி குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்தில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்க மீன்வளத்துறை அனுமதி அளித்து வந்தது. கடந்த ஜூலை மாதத்துடன் முந்தைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் மீனவ கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று பெள்ளாதி குளத்திற்கு மீன்பிடிக்க படகுகள் மற்றும் வலைகளுடன் வந்தனர்.

ஆனால், முந்தைய ஒப்பந்ததாரர் மோகன்ராஜ் என்பவர் அவர்களை தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த காரமடை போலீசார், மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு தரப்பினரும் இரண்டு நாட்களுக்கு பெள்ளாதி குளத்தில் மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மேலும், யாரும் குளத்தில் மீன்பிடிக்காமல் இருக்க கண்காணிக்கும் பொருட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு நாட்களில் பெரும்பாலான மீனவர்களின் கருத்தை கேட்டு, அதன் அடிப்படையில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதனால், ஒப்பந்த காலம் முடிந்ததால் மீன் பிடித்து விடலாம் என நினைத்து வலைகளுடன் வந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...