அன்னூரில் அவிநாசி அத்திகடவு திட்டக் குழாய் உடைப்பு: வீணாகும் தண்ணீர்

அன்னூர் அருகே அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார். விவசாயிகள் தரமான குழாய்கள் அமைக்க கோரிக்கை.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அல்லிக்குளம் ஊராட்சியில் அவிநாசி அத்திகடவு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக புகார் எழுந்துள்ளது.

அல்லிக்குளம் ஊராட்சியில் உள்ள அல்லி குளம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தில் அண்மையில் அவிநாசி அத்திகடவு திட்டம் மூலம் தண்ணீர் நிரப்ப குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

திட்டம் நிறைவேற்றப்பட்டு குளத்திற்கு தண்ணீர் வர தொடங்கி ஒரு மாதத்திற்குள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் தண்ணீர் சாலைகளிலும் வீணாக செல்கிறது. தரமான குழாய்கள் பதிலாக சாதாரண குழாய்கள் அமைக்கப்பட்டதால் அவ்வப்போது இந்த திட்டத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

நீண்ட நாட்களாக எப்போது தண்ணீர் வரும் என காத்திருந்த நிலையில், தற்போது வரும் தண்ணீரும் வீணாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். தரமற்ற முறையில் உள்ள குழாய்களை மாற்றி தண்ணீர் வீணாவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தற்போது அல்லி குளம் பகுதியில் குழாய் உடைப்பின் வீடியோ காட்சிகள் அந்த கிராம மக்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த புகார்களை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...