மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்து: தீயில் சிக்கி ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் அதிவேக கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தீப்பிடித்த காரில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த கார் ஒன்று தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்கு அருகே உள்ள பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

விபத்துக்குள்ளான கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தீ பிடித்து எரிந்த காரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். இதனால் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் பிடித்த தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர் சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்த நவீன்குமார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...