கோவையில் காலாவதியான குளிர்பானம் விற்பனை: கடை உரிமையாளரை எதிர்த்த தம்பதியின் வீடியோ வைரல்

கோவை போத்தனூரில் உள்ள உணவகத்தில் காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டதை கண்டித்த தம்பதியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.


கோவை: கோவை போத்தனூரைச் சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சாவிற்காக காத்திருந்தபோது, அருகிலுள்ள டீக்கடையில் கேக் மற்றும் மா (Maa) குளிர்பானம் வாங்கினர். குளிர்பானத்தை திறந்து குடிக்கும்போது அது கெட்டுப்போயிருப்பதை உணர்ந்தனர்.

கடையில் பணிபுரிந்த நபரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் குளிர்பானம் கெட்டுப்போகவில்லை என்றும், அதன் காலாவதி தேதி இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதாகவும், அது சமீபத்தில் வாங்கப்பட்டது என்றும் கூறினார். ஆனால், அருகில் இருந்தவர்களிடம் குடித்துப் பார்க்கச் சொன்னபோது, அதுவும் கெட்டுப்போயிருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தை தங்கள் செல்போனில் பதிவு செய்த தம்பதியினர், அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...