சூலூரில் தொடர் திருட்டு: மூன்று பேர் கைது, 19 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 19 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம், சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழு தீவிர புலனாய்வு நடத்தியதோடு, முன்னாள் குற்றவாளிகளையும் விசாரணைக்கு உட்படுத்தினர்.

விசாரணையின் போது, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இம்ரான் (36), அபுதாகிர் (36) மற்றும் ஹக்கீம் (40) ஆகிய மூவரும் சந்தேகத்திற்குரியவர்களாக அடையாளம் காணப்பட்டனர். மேலும் விசாரணையில், இவர்கள் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

தனிப்படை காவலர்கள் இந்த மூன்று நபர்களையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, சூலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளுடன் தொடர்புடைய 19 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் செப்டம்பர் 7 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை சூலூர் பகுதியில் நிலவிய பாதுகாப்பின்மை உணர்வை குறைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...