கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல்: இருவர் கைது

கோவை பீளமேடு அருகே போலீசார் வாகன சோதனையின் போது 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.


கோவை: கோவை பீளமேடு அருகே வேனில் கடத்தி வந்த 458 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் செப்டம்பர் 6 அன்று பீளமேடு, காந்தி மாநகர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 458 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த குட்கா கடத்தலில் ஈடுபட்ட வி.கே. ரோடு, ஏ.டி. காலனியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 34) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சர்வன் கிரி (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்ந்து செயல்பட்ட முகேஷ் என்பவர் தலைமறைவாகி உள்ளார்.

கைதான நபர்களிடமிருந்து ஒரு வேன், ஒரு மோபெட் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...