தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்: தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று மகிழ்ச்சி

தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.


திருப்பூர்: தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, தாராபுரத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பாக ஒன்று கூடினர்.



மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் மகேஷ், மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் ஷேக் பரீத் மற்றும் மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் செல்வி ரமேஷ் ஆகியோர் தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...