தாராபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்களின் அராஜகம் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு வழி விடாமல் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அராஜகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளை பேருந்து ஒன்று, கரூர் செல்வதற்காக தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது, தாராபுரம் முதல் கரூர் வரை செல்லும் தனியார் பேருந்து (TN 47 V 2005) ஓட்டுநர்கள், அரசு பேருந்துக்கு வழி விடாமல் அராஜகம் செய்தனர். மேலும், மற்றொரு தனியார் பேருந்து (TN 47 AF 9559) உரிமையாளர் கந்தன் என்பவரும் அரசு பேருந்துக்கு வழிமறித்து அராஜகம் செய்தார்.



இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களிடையே இச்சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...