கோவையில் விநாயகர் சிலைகளை கரைக்க குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 708 சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. செப்டம்பர் 9, 11 தேதிகளில் ஊர்வலம் நடைபெற உள்ளது. சிலைகளை கரைக்க குனியமுத்தூர் உள்ளிட்ட குளக்கரைகளில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் 708 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குனியமுத்தூர் உள்ளிட்ட முக்கிய குளக்கரைகளில் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக மொத்தம் 3,500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, இந்து மக்கள் கட்சி (தமிழகம்), பாரத் சேனா மற்றும் பிற இந்து அமைப்புகள் சார்பில், செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

விநாயகர் சிலைகள் சிங்காநல்லூர், குறிச்சி குளம், குனியமுத்தூர், வெள்ளக்கிணறு மற்றும் முத்தண்ணங்குளம் ஆகிய இடங்களில் கரைக்கப்பட உள்ளன. இந்த இடங்களில் சிலைகளை பாதுகாப்பாக கரைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.



குறிப்பாக, குனியமுத்தூர் குளக்கரையில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சிலைகளை கரைப்பதற்கான இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.



விழா காலத்தில் எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...