உடுமலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

உடுமலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி, சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் அச்சம். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.



Coimbatore: உடுமலையில் கடந்த சில மாதங்களாக நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடமாடி வருவதாகவும், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அய்யலுமீனாட்சி நகர், எஸ்.எஸ். காலனி, எம்.எம். லே அவுட், வேலுச்சாமி நகர், சங்கர் நகர், திருக்குமரன் நகர், நெப்போலியன் நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக தெரிகிறது. முகமூடி அணிந்த இந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாகவும், பொதுமக்கள் சத்தமிட்டால் தப்பி ஓடுவதாகவும் கூறப்படுகிறது.



காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், முகமூடி அணிந்த இந்த நபர்கள் எவ்வித பயமுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடமாடி வருகின்றனர். இதுவரை இந்த மர்ம நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடுமலை பகுதியில் கூடுதல் காவல்துறையினரை நியமித்து ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நடக்கும் இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...