உடுமலையில் எம்.பி அலுவலகம் மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்

உடுமலையில் பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறந்து சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரன் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உடுமலைப்பேட்டை வ.உ.சி. வீதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதியின்படி பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.பி. அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து, அலுவலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...