துடியலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய வட மாநில வாலிபர் கைது

கோவை துடியலூர் பகுதியில் இரண்டு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த வட மாநில வாலிபர் பொதுமக்கள் உதவியுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை துடியலூர் வெள்ளகிணறு பிரிவு பகுதியில் மேட்டுப்பாளையம் மெயின் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாலிபர் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்றும், மெயின் ரோட்டில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்து வந்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்புறம் தள்ளுவண்டி கடைகளில் வண்டிகளை தள்ளியும், பானைகளை உடைத்தும் அச்சுறுத்தலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 1) பொதுமக்களின் உதவியுடன் துடியலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் துடியலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. போலீசாரின் துரித நடவடிக்கையால் பிரச்சினை தீர்க்கப்பட்டது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...