தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட ஆணை: தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்திய பாராட்டு விழா

கோவை ராஜவீதியில் M.K தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விஸ்வகர்மா பேரவை தலைவர் பாண்டியன் தலைமையில் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.


Coimbatore: தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் M.K தியாகராஜா பாகவதர் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவானது தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நடத்தும் முப்பெரும் விழா மற்றும் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

விழாவில் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசளித்து பாராட்டி பரிசு தொகை வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் 21-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்கான பாடுபடும் சமுதாய தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன், தமிழகத்தில் பொற்கொல்லர் நல வாரியம் முடங்கி இருப்பதாகவும் அதனை கைவினையாளர்கள் நல வாரியம் என மாற்ற வேண்டும் எனவும் கூறினார். தச்சு தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், பாத்திரம் வேலை செய்பவர்கள், சிற்பம் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை எனவும், தமிழக அரசு அவற்றை முறையாக செயல்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் பாண்டியன் கேட்டுக் கொண்டார். தொழிலில் வறுமையில் இருப்பதால் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் எனவும், தொழிலாளர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதால் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...