கோவை GV ரெசிடென்சி பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம்

கோவை GV ரெசிடென்சி பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.


Coimbatore: கோவை GV ரெசிடென்சி பகுதியில் அமைந்துள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை பசுமைப் பரப்பாக மாற்றி அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டப்பணிகளை சிங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கழக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளருமான மணிசுந்தர் தலைமையில் ஒரு குழு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவில் மருத்துவர் அணி அமைப்பாளர் பிரதீப், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜவஹர் வெள்ளிங்கிரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நேரில் சென்று இப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தரமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



இந்த திட்டம் நிறைவடைந்தால், GV ரெசிடென்சி பகுதி மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பூங்காவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பகுதியின் அழகையும் மேம்படுத்தும் என்பதோடு, மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...