கோவை அசோகபுரத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: எம்.பி. கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. எம்.பி. கணபதி ராஜ்குமார் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்கம்மாள் காலனி ஓம்சக்தி கோவில் வீதியில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இந்த கடை தொடங்கப்பட்டுள்ளது.



கோயமுத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இந்த கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



அவர் பூஜைகள் செய்து கடையை தொடங்கி வைத்த பின்னர், ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஊராட்சித் துணைத் தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் நவீன், திமுக கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா, ஒன்றிய துணை செயலாளர் அசோக், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதே நாளில், ஆசிரியர் காலனி அரசு பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் முகாமும் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் மற்றும் மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...