கோவையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி தொடங்கி வைத்தனர்

கோவையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் எம்பி கணபதி ராஜ்குமார் இவற்றைத் தொடங்கி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளுக்கான சாவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்திகள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. கால்நடைகளுக்கு மருத்துவ வசதி எட்டாத கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இவை செயல்படும்.



திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து கிராமங்களுக்கும் இந்த வாகனங்கள் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளன. மேலும், இந்த வாகனங்களில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மொத்தம் 1962 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முயற்சி கிராமப்புற கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...