கோவையில் பிரியாணி சாப்பிடும் போட்டி: பரிசுக்காக குவிந்த உணவு பிரியர்கள்

கோவையில் போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் பங்கேற்றனர். ரூ.1 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.



Coimbatore: கோவை ரயில் நிலையம் அருகே உள்ள போச்சே புட் எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான உணவு பிரியர்கள் குவிந்தனர்.

போட்டியில் 3 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25,000, 4 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50,000, 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் கவரப்பட்ட உணவு பிரியர்கள், எதிர்பார்த்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக வந்து குவிந்தனர்.



போட்டியாளர்கள் டோக்கன்கள் மூலம் குழுக்களாக பிரிக்கப்பட்டு, சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டிகள் நடத்தப்பட்டன. அரை மணி நேரத்தில் வரையறுக்கப்பட்ட அளவு பிரியாணிகளை சாப்பிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



சிக்கன் பிரியாணி பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால், அளவு அதிகமாக இருந்தது. இதனால் பலரும் திணறி திணறி சாப்பிட்டனர். சிலர் சாப்பிட முடியாமல் இடையிலேயே விலகினர்.

போட்டியில் பங்கேற்றவர்களில் கணேச மூர்த்தி என்பவர் தனது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனுக்காக நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்றதாக தெரிவித்தார். இது பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கோவையில் இருந்து மட்டுமல்லாமல், கேரளாவிலிருந்தும் பலர் இந்த போட்டியில் பங்கேற்க வந்திருந்தனர். உணவு பிரியர்களின் மகிழ்ச்சிக்காகவும், உதவி தேவைப்படுவோருக்கு உதவும் நோக்கிலும் இது போன்ற போட்டிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...