பொள்ளாச்சி அருகே இலங்கை தமிழர் குடியிருப்புகள் இடியும் நிலை: சார் ஆட்சியரிடம் முறையீடு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்கள், சிதிலமடைந்த குடியிருப்புகளால் பாதுகாப்பின்றி வாழ்வதாக சார் ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத் துறைக்குச் சொந்தமான குடியிருப்புகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்தும், சிதிலமடைந்தும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் உயிருக்கு அச்சம் கொண்டு வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர். சுமார் 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தங்களுக்கு அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டனர்.

குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைத்துத் தரக் கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் முறையிட்டனர். இந்த நிலையில், மாற்று குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...