சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைப்பு

கோவை மாவட்டம் சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்தது. இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்தது. நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மார்க்கெட் ரோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்துள்ளது.



இந்த நிலம் சூலூர் கிராம புல எண். 704/5 (பழைய புல எண்.422/15) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 400 சதுர மீட்டர் (10 செண்ட்) பரப்பளவு கொண்ட சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலமாகும்.



இந்த நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடத்தை எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்கும் வகையில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...