'அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி' - அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கடும் விமர்சனம்

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். அண்ணாமலையை அரசியல் கோமாளி என்று குறிப்பிட்டார்.



கோவை: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.



ராமச்சந்திரன் கூறுகையில், "திமுகவை பற்றி பேசினால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அண்ணாமலை ஒரு அரசியல் கோமாளி. கருணாநிதி நாணயம் எதற்கு வெளியிட்டார்கள் என்று கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எம்ஜிஆர்க்கு நாணயம் வெளியிட்டது மத்திய அரசுக்கு தான் பெருமை," என்றார்.

மேலும் அவர், "அண்ணாமலையிடம் யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு பதற்றம் வந்து விடுகிறது. பயப்பட கூடியவர்கள் தான் பதற்றம் அடைவார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கும் பொழுது எடப்பாடியார், எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் அண்ணா அண்ணா என்று கெஞ்சிக் கொண்டிருந்தவர் தான் அண்ணாமலை," என்று குறிப்பிட்டார்.

Go Back Modi என்று திமுக தொடர்ந்து செய்து வந்ததை சுட்டிக்காட்டிய ராமச்சந்திரன், "திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரசை சேர்ந்த ஒருவரை எதற்காக அண்ணாமலை ரகசியமாக சந்தித்தார்? DMK Files என்று வெளியிட்டுப் பேசிய அண்ணாமலை வெட்கமே இல்லாமல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொண்டார்?" என்று கேள்வி எழுப்பினார்.



அண்ணாமலையின் விவசாயி பிம்பத்தை கேள்விக்குள்ளாக்கிய ராமச்சந்திரன், "அண்ணாமலையே விவசாய நிலத்தை விற்று கொண்டு இருக்கிறார். ஆனால் தான் விவசாயி மகன் என்று கூறி கொள்கிறார். அதிமுக ஊழல் கட்சி என்று அண்ணாமலை கூறுகிறாரென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது அது தெரியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

"20 ஆயிரம் புத்தகம் படித்தவரிடம் அனைத்து கேள்விகளுக்கும் விடையிருக்க வேண்டும். அண்ணாமலை கட்சித் தலைவர் இல்லை, YouTube Influencer," என்று ராமச்சந்திரன் சாடினார்.

பின்னர் அண்ணாமலை, பாஜக, திராவிட கட்சிகள் பற்றியும் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் புரிய வேண்டும் எனக் கூறி ஹிந்தியில் பேசினார். "முடிந்தால் பாஜகவில் உள்ளவர்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிமுகவிலிருந்து யாரும் வரமாட்டார்கள்," என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் அமெரிக்க பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ராமச்சந்திரன், "இதற்கு முன்பு முதல்வர் வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததில், முதலீடு இங்கு வந்திருக்கிறதா? வேலைவாய்ப்பு உருவாகி இருக்கிறதா? இதற்கெல்லாம் முதலில் பதில் கொடுத்துவிட்டு செல்லட்டும். இல்லையென்றால் போய் வருவதற்கான அரசாங்க பணம்தான் வீண்," என்று கூறினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...