கோவையில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள்: 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள்

கோவை அசோகபுரத்தில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 1000 பேருக்கு அன்னதானம், 100 பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. கட்சி கொடியேற்றம், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் நான்கு ரோடு பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சார்பில் தேமுதிக கட்சி நிறுவனரும், திரைப்பட நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சண்முகவடிவேல் தலைமையேற்று, விஜயகாந்தின் உருவப்படத்திற்கு கற்பூரம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், 35 அடி உயர கொடிக்கம்பத்தில் தேமுதிக கட்சிக்கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் "கேப்டன் புகழ் ஓங்குக" என முழக்கமிட்டனர்.



விழாவின் ஒரு பகுதியாக, 100 பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட செயலாளர் சண்முக பாண்டியன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் சக்கையன் ஆகியோர் வழங்கினர். மேலும், சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதேபோல், என்.ஜி.ஜி.ஓ காலனி கேட், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்கையா மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் ஒன்றிய அவைத்தலைவர் வடமதுரை முருகன், சஹூல் அமிது, தங்கதுரை, ஆறுமுகம், விமல்பாலாஜி, சுலைமான், அஜீத், ரமேஷ், பாக்கியராஜ், போனஸ் பாபு, திங்கலூர் பாபு, தனபால், துடியலூர் ரமேஷ், சுடலைமுத்து, கணேஷன், விஜயகுமார், பாலாஜி, சிவா, ஆட்டோ ஆறுமுகம், லட்சுமணன், துரை, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...