விஜயகாந்த் பிறந்தநாள்: கோவையில் தேமுதிக தொண்டர்கள் கொண்டாட்டம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். குழந்தைக்கு விஜய பிரபாகரன் பெயரிட்டு, அன்னதானம் வழங்கினர்.


கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தேமுதிக தொண்டர்கள் கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர். தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் உலகில் முக்கிய ஆளுமையாக விளங்கிய புரட்சி கலைஞர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அவரது திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு மற்றும் விஜயகாந்தின் தீவிர ரசிகர் சுலைமான் உள்ளிட்டோர் தலைமையில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தேமுதிக கொடியேற்றப்பட்டு, விஜயகாந்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, ராஜகுரு பாரதி தம்பதியின் ஆண் குழந்தைக்கு விஜயகாந்தின் மகன் பெயரான 'விஜய பிரபாகரன்' என பெயர் சூட்டப்பட்டது. மேலும், அக்குழந்தைக்கு தங்க மோதிரமும் அணிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு தேமுதிக தொண்டர்கள் தங்கள் தலைவரின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...