வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம்: 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 15,000க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



வால்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் வி. அமீது, நகர செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



கூட்டத்திற்கு முன்னதாக, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு எஸ்.பி. வேலுமணி இரண்டு குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கினார். இதையடுத்து, செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, "கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விழிப்புடன் இருந்து வெற்றி பெற உறுப்பினர்களும் தொண்டர்களும் பாடுபட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர், "வால்பாறையில் 50 ஆண்டுகாலமாக இல்லாத வளர்ச்சியை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி, நகராட்சி அலுவலகத்தை விரிவுபடுத்துதல் போன்ற பணிகள் மூலம் வால்பாறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கட்சி அதிமுக. இக்கட்சியை வீழ்த்த யாராலும் முடியாது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயன், ஐடி விங் சசிகுமார், சுடர் பாலு, சலாவுதீன், எம்.ஆர்.எஸ். மோகன், ஆர்.ஆர். பெருமாள், ஆர்.ஆர். சசிகுமார், பழனிச்சாமி, எஸ்.கே.எஸ். பாலு மற்றும் பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...