பல்லடத்தில் 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க திட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் நிலத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள 120க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான மாணிக்கபுரம் சாலையில் உள்ள 12 ஏக்கர் நிலத்தை மீட்க அங்காளம்மன் கோயில் குழுவினர் இந்து அறநிலைத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



ஆனால், இந்து சமய அறநிலைத்துறையின் ஆய்வாளர் பேச்சுவார்த்தைக்கு வராததால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இப்பகுதியில் வசிக்கும் சுமார் 120க்கும் மேற்பட்டோரின் வீடுகள் இடிக்கப்படும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவித்தனர்.



மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலும், வீடுகளை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் தங்களின் நிலை மிகவும் துயரமாக உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...