பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பள்ளி மாணவர்களுக்கு சிறுநீரக நோய் விழிப்புணர்வு

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 64 பள்ளி மாணவர்களுக்கு டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சிறுநீரக நோய் காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டயாலிசிஸ் பிரிவில் சிறுநீரக நோய் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் பொள்ளாச்சி சாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 64 மாணவர்கள் பங்கேற்றனர்.

பொது மருத்துவ துறை மற்றும் டயாலிசிஸ் பிரிவு தலைவர் மருத்துவர் வனஜா, மாணவர்களுக்கு சிறுநீரகம் செயலிழப்பது குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் விரிவாக விளக்கினார். சிறுநீரக மாற்று சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.



சிறுநீரகம் செயலிழப்பதற்கான முக்கிய காரணங்களாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தாமல் இருப்பது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை மருத்துவர் வனஜா சுட்டிக்காட்டினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் கௌரி மற்றும் டயாலிசிஸ் டெக்னீசியன் அனுசுயா ஆகியோரும் உடனிருந்தனர்.

பயிற்சியின் முடிவில், பள்ளி மாணவர்கள் இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...