கிணத்துக்கடவு: குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு - வார்டு கவுன்சிலர் எதிர்ப்பு

கிணத்துக்கடவு சொலவம்பாளையம் ஊராட்சியில், குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி. வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி சொலவம்பாளையம் ஊராட்சியில் முறைகேடான முறையில் தண்ணீர் இணைப்பு வழங்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சொலவம்பாளையம் ஊராட்சியின் முதல் வார்டுக்கு உட்பட்ட பகுதியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஊராட்சி சார்பில் தண்ணீர் பைப் போடுவதற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள அன்பு நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வேண்டி பல முறை அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அதேபோல், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் அவர்களும் ஊராட்சி தலைவரிடம் பல முறை இது குறித்து வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் வழங்காமல், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக குடியிருப்பு இல்லாத பகுதியில் தண்ணீர் இணைப்பு கொடுப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக கவுன்சிலர் சதீஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், குடியிருப்புகள் உள்ள பகுதிகளுக்கே முதலில் தண்ணீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...